Coimbatore, India
Unnamed Road, Ganapathypudur
N/A
இறந்தவரின் நினைவாக தானம் கொடுப்பதும், நினைவுக் கல் நிறுவப்படுவதும் பழந்தமிழர் மரபு.அந்தவகையில் கர்ப்ப காலத்தில் இறக்கும் பெண்களுக்கு சுமைதாங்கி கற்கள் அமைப்பது, தண்ணீர் பந்தல் அமைத்து மக்களுக்கு பயன்படும் வகையில் செய்ததற்கான சான்றாக இந்த பலகை கல்வெட்டு உள்ளது. இரங்கணகவுண்டர் மகன் நாறாயணக்கவுண்டன் உடையாம்பாளையம் பகுதியில் உள்ள மகாவிஷ்ணு மாரியம்மன் கோவிலுக்கு அருகில் தண்ணீர் பந்தல் அமைத்த நிகழ்வினை இந்த கல்வெட்டு குறிக்கிறது. கல்வெட்டில் சாலிவாகன வருஷம் என்றுள்ளது இதனை ஆங்கில ஆண்டு 1913 எனக்கொளல் வேண்டும். கல்வெட்டு வாசகம்: சிவமயம் கலியுக வருஷம் 5014 சாலிவாகந வருஷம் 1835பிரவாதி 42முதல் பரிதா பி வருஷம் ஆடி மாதம் 3தேதி குருவாரமும் ஒடையாம்பா ளையம்(இன்றைய உடையாம்பாளையம்) வடக்கு வலை இரங்க ண கவுண்ட ன் மகன் நாறா யண கவுண்ட ன் தண்ணீர் ப ந்தல் மேடை சுமை தாங்கி மாகாவிஷ்ணு மாரியம்மனுக் கு உபையம்.
like
கோவையின் பெருமைகளில் இந்த பலகைகள் கல்வெட்டும் ஒன்று இறந்த தன் மனைவியின் நினைவாக மகாவிஷ்ணு மாரியம்மன் கோவில் முன்பு நிறுவப்பட்ட தண்ணீர்பந்தல் பற்றிய கல்வெட்டு கொண்ட பலகை கல்வெட்டு இதுபோல் தமிழகம் முழுவதும் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கல்வெட்டுகள் மற்றும் நடுகற்கல் மற்றும் நினைவுச் சின்னங்களை போற்றி பாதுகாப்போம் தமிழர் பெருமை போற்றுவோம் தமிழக மரபுசார் ஆர்வலர்கள் சங்கம் கோவை ஆர்வலர்கள்
Deli
The best companies in the category 'Deli'